கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கட்டடத் தொழிலாளி ஒருவர் தனது குடும்ப பொருளாதார நிலையையும் பொருட்படுத்தாமல் தனது மனைவிய மேல் படிப்பு படிக்க வைத்தார். ஆனால் கணவரையும், இரண்டு குழந்தைகளையும் தவிக்க விட்டு விட்டு தனது கள்ளக்காதலருடன் ஓடிப் போய் விட்டார் மனைவி.

கண்ணக்கோடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் ரசல்குமார் (27). கட்டட தொழிலாளியான இவரது மனைவி பெயர் ஷைனி. 22 வயதாகிறது. இருவரும் காதல் மணம் புரிந்தவர்கள். இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.
ஷைனி பட்ட மேற்படிப்பு படிக்க விரும்பியதால் அவரை ரசல்குமார் படிக்க வைத்து வந்தார். படிப்பு தொடர்பாக அடிக்கடி நெல்லை போய் வந்தார். அப்போது டிரைவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக் காதலாக மாறியது. நேரில் பார்த்தது போக வீடு திரும்பியதும் செல்போனில் பேசியபடி இருப்பாராம் ஷைனி.
இந்த நிலையில் கடந்த 5ம் தேதி நள்ளிரவில் ஒரு போன் வந்துள்ளது. அதை எடுத்து ஷைனி நீண்ட நேரம் பேசியுள்ளார். அடுத்த நாள் காலையில் அவர் காணாமல் போய் விட்டார். ரசல்குமார் பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. வீட்டில் வைத்திருந்த 18 பவுன் நகைகள், பணம். தனது உடைகளுடன் அவர் மாயமாகி விட்டார்.
இதுகுறித்து அவர் போலீஸில் புகார் கொடுக்கவே, போலீஸார் விசாரணையில் இறங்கினர். அதில், களியக்காவிளையைச் சேர்ந்த ஒருவருடன்தான் அதிக நேரம் அவர் போனில் பேசியது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் விசாரித்தபோது அவர்தான் அந்த டிரைவர் என்றும், அவருடன் தான் ஷைனி ஓடிப் போனதும் தெரிய வந்தது. அவர்கள் தங்கிய இடத்தைக் கண்டுபிடித்த போலீஸார் அங்கு விரைந்தபோது இருவரும் அங்கிருந்து தப்பி விட்டனர். தற்போது கேரளாவுக்குப் போய் விட்டதாக கூறப்படுகிறது.
கணவரையும், இரண்டு குழந்தைகளும் பரிதவிக்க விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிப் போன மனைவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Post A Comment: