Articles by "State News"
Showing posts with label State News. Show all posts
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி 15 மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன் காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர்.
இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க 3 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த ஆலோசனையின் போது முதலமைச்சர் பழனிசாமி கூறியதாவது;- “* தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1000 கோடி வழங்க வேண்டும்,

* 2020-21-ம் நிதியாண்டுக்கான உள்ளாட்சி அமைப்பு நிதியில் 50 சதவீதத்தை வழங்க வேண்டும்,

* சிறுகுறு தொழில் வளர்ச்சிக்கு ரூ.1000 கோடியை வழங்க வேண்டும்,

* தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்துக்கு மறு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடி வழங்க வேண்டும் என்றும் மார்ச் மாதம் வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவை தொகையை உடனே விடுவிக்க வேண்டும்,

* கொரோனா தடுப்பு பணிக்கு, மருத்துவ உபகரணங்கள் வாங்க 3 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும்” என்று பிரதமரிடம் வலியுறுத்திய முதலமைச்சர், எல்லையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் மத்திய அரசுக்கு தமிழகம் ஆதரவாக இருக்கும் என கூறியுள்ளார்.
இணையவழி வகுப்பு நடத்துவதற்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள அதிமுக அரசு, திறைமறைவில் குழுவை அமைத்து அதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை புறக்கணித்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை கிள்ளுக்கீரையாக எண்ணி, மனம் போன போக்கில் விளையாடும் அதிமுக அரசின் இந்த செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. கிராம பகுதிகளில் உள்ள மாணவர்கள் இணையவழி கல்வியை பெறத் தேவையான உள்கட்டமைப்பு இல்லை.

ஆசிரியரிடம் நேரடியாக கேள்வி கேட்டு கலந்துரையாடாமல், கல்வியை கற்றுக் கொள்வது சிரமம். கல்வி என்பது கற்றறிய வேண்டியது, அது பங்குச்சந்தை வியாபாரம் போன்றது அல்ல என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.

மேலும் இணையவழி கல்வியால் மாணவர்களின் உடல்நிலை பாதிப்படைவதோடு, தேவையில்லாத மன அழுத்தத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும். நீண்ட நேரம் கணிணியை பார்த்துக் கொண்டிருப்பதால் பார்வை குறைபாடுகள் ஏற்படலாம்.

நேரடியாகக் கற்றல்-கற்பித்தல் என்ற வகுப்பறை சூழல் மட்டுமே கல்வி முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். இணையவழிக்கல்வி முறை, நிச்சயமாக வகுப்பறை கல்விக்கு மாற்று இல்லை. நிழல் நிஜமாகிவிடாது” என்று தெரிவித்துள்ளார். 'டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகள்' முழுமையாக இல்லாத தமிழகத்தில் #OnlineClasses மாணவர்களிடயே பாகுபாட்டை உண்டாக்கி எதிர்காலத்தைப் பாழடித்துவிடும்.

குழந்தைகளின் உள - உடல் நலனையும் பாதிக்கும்!

நிழல் நிஜமாகாது என்பதை உணர்ந்து #ADMKgovt இணையவழி கல்விக்கு அனுமதி வழங்கக் கூடாது. pic.twitter.com/uVJxWtM3bF

— M.K.Stalin (@mkstalin) June 17, 2020
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனா பாதிப்பு அதிக அளவில் இருக்கும் சென்னையில் பொதுப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.
அந்த வகையில் சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த 47 வயது பாலமுரளி கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமானதையடுத்து அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து சிகிச்சை பலனின்றி பாலமுரளி உயிரிழந்தார். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாலமுரளி கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் காவல்துறையினறை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்படி பழனிசாமி, காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி மறைவு மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். பாலமுரளியை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார். மேலும் பாலமுரளி குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப்பணி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று மேலும் 2,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,193 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக இன்று 2 ஆயிரத்தைத் தாண்டி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
இன்று சென்னையில் மட்டும் 1,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 35,556 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று 25,463 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களான திருவள்ளூரில் 90 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 162 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 61 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த 38 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 48 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதில் 38 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 10 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று 842 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலமாக தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,624 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 21,990 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வரும் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நான்கு மாவட்டங்களிலும் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணமாக, அரிசி கார்டுதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். மேலும் இந்த தொகையை ரேஷன் ஊழியர்கள் மூலம், வரும் 22-ந் தேதி முதல் வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக சென்று நிவாரணத் தொகையை விநியோகிக்க முடியாது என தமிழ்நாடு கூட்டுறவு நியாயவிலைக்கடை அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்தது.

கட்டுப்படுத்த பகுதிகளில் காவல்துறை உதவியோடு தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினால் தாங்கள் வீடுகளுக்குச் சென்று பொருட்களை விநியோகம் செய்யத் தயார் எனவும் பிற பகுதிகளில் உள்ள மக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்ள தமிழக அரசு உத்தரவிட வேண்டும் எனவும் நியாயவிலைக்கடை அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்தது.

இதனை தொடர்ந்து முழு ஊரடங்கு அமலாகவுள்ள 4 மாவட்டங்களில் 22-ம் தேதி முதல் காலை 8 முதல் மாலை 6 மணி வரை வீடுகளுக்கே சென்று ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

சம்மந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடுகளுக்கு நேரடியாக சென்று பணம் விநியோகம் செய்யப்படும் என்றும் அந்த 4 மாவட்டங்களில் 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை ரேஷன் கடைகள் செயல்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுப்பணிகளில் ஈடுபட்டு வருபவர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வரும் நிகழ்வுகள் சோகத்தை அளித்து வருகின்றன. மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் உள்பட பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
காவல்துறையில் இதுவரை கொரோனாவால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாமல் இருந்த நிலையில், சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 47 வயது காவல் அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் உடல்நிலை மோசமானதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனாவால் காவல் அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் காவல்துறையினறை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.