கன்னியாகுமரி அருகே உள்ள மார்த்தாண்டத்தில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த 10 வான்கோழிகளை மர்மவிலங்கு கடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது.

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வடக்கு தெரு குருவிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெகன். கூலித் தொழிலாளி. அவர் தனது வீட்டில் வான் கோழிகள் வளர்த்து வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் வான்கோழிகளை கூண்டில் அடைத்தார். காலையில் பார்த்த போது கூண்டு திறந்து கிடந்தது. 5 வான் கோழிகள் கூண்டுக்கு வெளியே இறந்து கிடந்தன.
மேலும் கூண்டிற்குள் 5 கோழிகள் இறந்து கிடந்தன. அனைத்து வான்கோழிகளும் கழுத்து மற்றும் வயிறு பகுதியில் கடித்துக் குதறப்பட்டிருந்தன. அவற்றின் ரத்தம் முற்றிலும் குடிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பகுதியில் கடந்த ஒரு ஆண்டு காலமாக வீட்டில் வளர்க்கப்படும் வான்கோழிகள், நாட்டுக் கோழிகள், ஆடுகள் நள்ளிரவு நேரத்தில் கடித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.
இது குறித்து வனத்துறையிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Post A Comment: