தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குமரி மாவட்டத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதற்கிடையே தலைமைச் செயலக ஊழியர்கள் 138 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் கிருமி நாசினி தெளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து குமரி மாவட்டத்திலும் அரசு அலுவலகங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நேற்று முதல் நடந்து வருகிறது. நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அலுவலகங்கள், வளாகங்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், அதில் உள்ள பிரிவு அலுவலகங்கள், கூட்ட அரங்கு, அலுவலக வளாகம் ஆகிய பகுதிகளில் நேற்று நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது. இதேபோல் நாகர்கோவிலில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம், மாநகராட்சி அலுவலகம், ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையம், மின்வாரிய அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
Next
This is the most recent post.
Previous
Older Post
Axact

Kumari News18

"Kumari News18" E-Magazine from Nagercoil, Kanyakumari District, Tamilnadu. The Website has been publishing News and Information since June 2020. It is organised by YemYes Network. Through this site you can find News, Information, Historical Notes, Scientific Information, Achievers Articles, Stories and more...

Post A Comment: