தமிழகத்தில் குளச்சல் அருகே இனையம் பகுதியில் மிகப்பெரிய துறைமுகம் அமைப்பதால் கேரளாவில் விழிஞ்சம் துறைமுகம் பாதிக்கும் என்பதால் அந்த திட்டத்தைக் கைவிடக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் குளச்சல் அருகே இனயம் பகுதியில் மிகப்பெரிய துறைமுகம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை கொள்கை அளவிலான ஒப்புதலை அளித்துள்ளது. இத்திட்டத்திற்கு கேரளத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேரள அமைச்சரவையிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்திற்கு அருகாமையில் இன்னொரு துறைமுகம் அமைக்க வேண்டிய அவசியம் வந்தது ஏன்? என கேரள துறைமுகத் துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.
கொச்சி துறைமுகத்தை காட்டி விழிஞ்சம் துறைமுகத் திட்டத்திற்கு மத்திய அரசு இதற்கு முன் எதிர்ப்பு தெரிவித்தது. எனவே, இப்போது மாநில அரசு தனது அதிருப்தியை மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், குளச்சல் துறைமுகத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாகவும், இதுகுறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் முதலமைச்சர் பினராயி விஜயன் கூறினார்.
35 கி.மீ. தொலைவில் இரண்டு துறைமுகங்கள் அமைவதால் பயனில்லை என்றும், இந்த புதிய துறைமுகம் விழிஞ்சம் வர்த்தக துறைமுகத்தை பாதிக்கும் என்றும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
Post A Comment: