கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் சென்னையிலும் அதை சுற்றி அமைந்துள்ள செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளிலும் நோய்த்தொற்று பரவல் மிகவும் அதிகரித்து இருக்கிறது.
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 1,257 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 33,244 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை கொரோனா பாதிப்பு குறித்து நடிகர் விவேக் “தன்னை வளர்த்தவனுக்கு இளநீர் கொடுப்பது தென்னை; இந்த மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை; என தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர்த்னது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

எல்லோரும் கழிவிரக்கம்,அச்சமுடன் சென்னையை பார்க்கிறார்கள்.பரவல் அதிகமாக காரணம் இங்கு அதிக மக்கள் குறைந்த இடத்தில் நெருங்கி வாழ்கின்றனர். தலைநகர்! பல மொழி,இனத்தோர் கலந்து உள்ளனர். தன்னை வளர்த்தவனுக்கு இளநீர் கொடுப்பது தென்னை; இந்த மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை.அது மீளும்;வாழும்! என கூறி உள்ளார்.

எல்லோரும் கழிவிரக்கம்,அச்சமுடன் சென்னையை பார்க்கிறார்கள்.பரவல் அதிகமாக காரணம் இங்கு அதிக மக்கள் குறைந்த இடத்தில் நெருங்கி வாழ்கின்றனர்.தலைநகர்!பல மொழி,இனத்தோர் கலந்து உள்ளனர். தன்னை வளர்த்தவனுக்கு இளநீர் கொடுப்பது தென்னை; இந்த மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை.அது மீளும்;வாழும்!💪
Axact

Kumari News18

"Kumari News18" E-Magazine from Nagercoil, Kanyakumari District, Tamilnadu. The Website has been publishing News and Information since June 2020. It is organised by YemYes Network. Through this site you can find News, Information, Historical Notes, Scientific Information, Achievers Articles, Stories and more...

Post A Comment: